நீர்தேக்கத்தில் குதித்து உயர்தர மாணவி உயிர்மாய்ப்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாடசாலை மாணவி ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலவாக்கலை பெயாவல் தோட்டத்தைச் சேர்ந்த முத்துரட்ணம் ஜிலோனி (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் லிந்துலை பிரதேசத்திலுள்ள பிரபல தமிழ் பாடசாலையொன்றில் உயர் தரத்தில் கல்வி பயின்று வரும் இரண்டாம் வருட மாணவியென பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல தலவாக்கலை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவரின் மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *