யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மண் ஏற்றியவர் உழவு இயந்திரத்துடன் கைது!

இன்று இரவு, அனுமதிப்பத்திரம் இன்றி மண் ஏற்றிவந்த உழவு இயந்திரம் ஒன்று வட்டுக்கோட்டை பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டது.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரையில் மண்ணினை ஏற்றிக்கொண்டு குறித்த உழவு இயந்திரம் சென்றுகொண்டிருப்பதாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்போது வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்களான மயூரன் மற்றும் மிகிர்சன் ஆகியோர் சுழிபுரம் பத்திரகாளி கோவில் பகுதியில் வைத்து உழவு இயந்திரத்தினை மடக்கிப் பிடித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *