ரணிலின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு வஜிர அபேவர்தன நியமனம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் வெற்றிடமான ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது

முன்னதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினரை நிரப்புவதற்காக ருவன் விஜயவர்த்தனவின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட வஜிர அபேவர்தன, கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *