தானிய ஏற்றுமதியை கடல் வழியாக மீண்டும் தொடங்க அனுமதிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது!

உக்ரைனும் ரஷ்யாவும் தானிய ஏற்றுமதியை கடல் வழியாக மீண்டும் தொடங்க அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

‘கண்ணாடி’ ஒப்பந்தம் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், தற்போது உக்ரைனில் போரினால் சிக்கியுள்ள மில்லியன் கணக்கான டன் தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும்.

ரஷ்யாவின் பெப்ரவரி 24 படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனிய தானியங்களின் உலகப் பற்றாக்குறை மில்லியன் கணக்கானவர்களை பட்டினி ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இருப்பினும், உக்ரைன், ரஷ்யாவுடன் நேரடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது.

இரு தரப்பினரும் இஸ்தான்புல்லில் நடந்த கையெழுத்து நிகழ்வில் கலந்து கொண்டனர். ஆனால் ஒரே மேசையில் அமரவில்லை.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு முதலில் ரஷ்யாவின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், அதைத் தொடர்ந்து உக்ரைனிய உட்கட்டமைப்பு அமைச்சர் ஓலெக்சாண்டர் குப்ராகோவ் உக்ரைனின் ஒத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்த ஒப்பந்தம் அடைய இரண்டு மாதங்கள் எடுத்தது. இது 120 நாட்களுக்கு நீடிக்கும். ரு தரப்பினரும் ஒப்புக் கொண்டால் புதுப்பிக்க முடியும்.

இதற்காக, இஸ்தான்புல்லில் ஒரு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு மையம் நிறுவப்பட உள்ளது, ஐ.நா., துருக்கிய, ரஷ்ய மற்றும் உக்ரைனிய அதிகாரிகளால் இது இயக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *