பளை பொலிஸ் பிரிவுக் குட்பட்ட இந்திராபுரம் மனிதாபிமான கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்துக்குச் சொந்தமான பகுதியில் மர்மப் பொருளொன்று வெடித்ததில் 20 வயதுடைய காவலாளி ஒருவரின் கை சிதைவடைந்தது.
குறித்த சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றது .
குறித்த கண்ணிவெடியகற்றும் நிறுவனத்தினரால் மீட்கப்படும் வெடிபொருள் பாதுகாப்பாக பேணப்படும் பகுதியில் இருந்த மர்மப்பொருளொன்றை குறித்த காவலாளி , கையாள முற்பட்ட போது அது திடீரென வெடித்துள்ளது .
இதனால் காயமடைந்த குறித்த காவ லாளி முதலுதவிகளின் பின்னர் , யாழ்ப் பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார் .
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறசெய்திகள்
.