ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு ரூ. 1009 கோடி செலவு! பலன் என்ன?

நாட்டில் குற்றங்கள்,மோசடிகள், முறைகேடுகள், ஊழல்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகளை விசாரிக்க 2011 – 2016 காலப்பகுதியில் 5 ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.

இவற்றுக்காக ஆயிரத்து 9 கோடியே 51 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பணம் செலவிடப்பட்டது என்று அறிய வருகின்றது.

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக ஒரு பகுதி மாத்திரமே வெளியான
இந்தத் தகவலின்படி,ருகுணு பல்கலைக்கழக மாணவர் சுசந்த அநுர பண்டார மரணம் தொடர்பான விசாரணை ஆணைக்குழு, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு, மாத்தளை பொது மருத்துவமனையில் மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டது.

தொடர்பான ஆணைக்குழு, 1.1.1983 முதலான வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழு, கடுமையான மோசடி, ஊழல், பொது வளங்கள், சலுகைகள்,இவற்றில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் ஆணைக் குழுவும் 19 கோடி ரூபாய்களுக்கு மேல் செலவிட்டுள்ளன.

இந்த விசாரணைக்குழுக்களுக்காக ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்ட போதிலும் வழங்கப்பட்ட பரிந்துரைகள் எந்தளவுக்கு நடைமுறைப்படுத் தப்பட்டுள்ளன? பாதிக்கப்பட்டவர்களுக்கு
நீதி கிடைத்ததா? என்பன வெறும் கேள்வியாகவே உள்ளன.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *