யாழில் எரிபொருள் அட்டை பெற வரிசையில் காத்திருந்த குடும்பஸ்தர் பலி!

யாழில் எரிபொருள் அட்டை பெற காத்திருந்த குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்றையதினம் வேலணை புளியங்கூடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியைச்சேர்ந்த நடராசா பிரேம்குமார் (வயது 48) என்பவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு செல்ல வரிசையில் காத்திருந்த வேளையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *