நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பணவீக்கம் காரணமாக உணவுப் பொருட்களை கொள்ளையிடுவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தோட்டங்களில், மரங்களில் விளைந்துள்ள உணவுகளை கொள்ளையிடுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுவதுடன் பல சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ள போதிலும் முறைப்பாடுகள் முறையாக கிடைக்கவில்லை என தெரியவருகிறது.
அதேவேளை சிறப்பு அங்காடிகள் உட்பட பல்வேறு வர்த்தக நிலையங்களில் உணவு பொருட்களை கொள்ளையிட்ட ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் நடந்துள்ளன என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வர்த்தக நிலையங்களில் உணவுப் பொருட்களை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சமைக்கப்பட்ட உணவு அதாவது சோற்றுப் பாணைகள் போன்றன திருடப்பட்ட சில சம்பவங்கள் அண்மையில் நடந்துள்ளன.
பணவீக்கம் காரணமாக மூன்று வேளைக்கு பதிலாக ஒரு வேளை அல்லது இரண்டு வேளை சாப்பிடும் குடும்பங்களின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றில் அண்மையில் தகவல் வெளியாகியது.
பிறசெய்திகள்