அரச அலுவலகங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்க உங்கள் நாடுகளில் அனுமதிப்பீர்களா? – இராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி கேள்வி

அரச அலுவலகத்தை போராட்டக்கார்கள் சட்டவிரோதமாக கைப்பற்ற அனுமதி வழங்குவீர்களா என இராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான இராணுவ நடவடிக்கை குறித்து இராஜதந்திரிகள் வெளியிட்ட கருத்து குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னர் அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தகவல்களை பெறவேண்டும் என ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமூக ஊடகங்களை அடிப்படையாக கொண்டு அறிக்கைகளை வெளியிடுவது இலங்கையின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உத்தியோகப்பூர்வமில்லாத வகையில் தனது கரிசனையை அவர்களிடதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார்.என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி நீதிமன்ற உத்தரவை தொடர்ந்தும் அவர்கள் ஜனாதிபதி மாளிகையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தனர் என்பதையும் அவர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *