பாடசாலை சேவை வாகனங்களுக்கு டிப்போ ஊடாக எரிபொருள்

பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்து மற்றும் சிற்றூர்ந்து ஆகிய வாகனங்களுக்கு இன்று பிற்பகல் 3 முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாக எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி மற்றும் அது தொடர்பில் இனிவரும் காலங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.

கல்வி, மீன்பிடி, சுற்றுலா, விவசாய நடவடிக்கை மற்றும் பொது போக்குவரத்து சேவை சேவையில் ஈடுபடும் தனியார் மற்றும் அரச பேருந்துக்காக அவசியமான எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்தல் மற்றும் விரைவுபடுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *