பொலிஸ் நிலையங்களுக்கான புதிய பெயர் பலகைகள் நடும் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கான பெயர் பலகைகள் புதிதாக மாற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நீண்ட காலமாக சேதமடைந்து காணப்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் போன்றவற்றுக்கான புதிய பெயர் பலகைகள் இன்று புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கையினை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ஆகியோர் பார்வையிட்டனர்.
மேலும் கல்முனை பிராந்தியத்தில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல பகுதிகளிலும் குற்றச்செயல்கள் குறைந்துள்ளதுடன் பொலிஸாரும் பொதுமக்களுடன் சிநேகபூர்வமாக தொடர்புகளை மேற்கொண்டு குற்றச்செயல்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.




பிறசெய்திகள்
- எந்தெந்த இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு இன்று எரிபொருள்?
- கடனட்டை பாவனையார்களுக்கான விசேட அறிவுறுத்து
- இரத்த வெள்ளத்திற்கு மத்தியில் ராஜபக்சக்களை பாதுகாக்க முனையும் ரணில்
- இராணுவத்தின் பிம்பத்தை மீண்டும் கட்டி எழுப்ப இரவில் நடத்திய அராஜகமே காலிமுகத்திடல் தாக்குதல்! அருட்தந்தை மா.சத்திவேல்
- ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு 1009 கோடி செலவு! பலன் என்ன?