கொழும்பு மாநகரசபை உறுப்பினராக ரதினி பிரதீப்குமார் நியமனம்

கொழும்பு மாநகரசபையின், ஜனநாயக மக்கள் முன்னணி (DPF) உறுப்பினராக ரதினி பிரதீப்குமார் கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது நியமனம் தொடர்பான உறுதியுரையை கட்சி தலைவர் மனோ கணேசன் எம்.பியிடம் வழங்கி, நியமனத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையில் ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர் வரிசையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வண்ணமே ரதினி பிரதீப்குமார் நியமனம் பெற்றுள்ளார்.

இவர் தொழில் ரீதியாக தமிழ் மொழி, இந்து சமயம், சிங்கள – ஆங்கில இணைப்பு மொழி பாட ஆசிரியரும் ஆங்கில டிப்ளோமா தகைமையையும் உடையவர்.

மேலும், கொழும்பு மாநகர சபையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பாக பத்து உறுப்பினர்கள் பணியாற்றுகின்றார்கள்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *