
39 வருடங்களுக்கு பிறகு இலங்கையின் மீண்டும் ஒரு கறுப்பு நாளாக நேற்றைய தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களின் நினைவாக கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் கறுப்பு யூலை தினத்தின் தொடர்ச்சியின் விளைவே இன்றைய போராட்ட களம் என்ற தலைப்பிலே தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இன்றைய தினம் 39 வருடங்களுக்கு முன்னர் யூலை வன்முறை ஆரம்பித்த நாள். இன்று யூலை 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு தாக்குதலை காரணமாக கொண்டு 24ஆம் திகதியில் இருந்து நாடு பூராகவும் சிங்கள மக்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளிலே வாழ்ந்த முத்தமிழ் மக்களை மிக மோசமாக தாக்கி கொலை செய்து அவர்களது உடமைகளை தீக்கிரையாக்கி ஒரு வன்முறை தாண்டவம் ஆடிய நாட்கள் ஆகும்.
இந்த சம்பவம் இலங்கை வரலாற்றிலே கறுப்பு யூலை என்று அழைக்கப்படுகின்றது. ஏனென்றால் இது இலங்கையின் வரலாற்றையே இரண்டாக பிரிக்கக்கூடிய ஒரு சம்பவமாக இடம்பெற்று இருக்கின்றது.
எங்களுடைய வாழ்க்கையிலே நாங்கள் இளைஞராக இருந்த காலப்பகுதியில் மிகவும் மோசமாக இடம்பெற்ற ஒரு சம்பவம் .
குறித்த சம்பவத்தின் போது அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜெ.ஆர் ஜெயவர்த்தன அரசாங்கம் இந்த தாக்குதல்கள் முன்னின்று ஒழுங்கமைத்து நடத்தியது . இதனை அனைவரும் ஏற்று கொண்டுள்ள விடயம்.
இது தொடர்பாக 2004 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க அம்மையார் அரசாங்கத்தின் சார்பாக ஒரு மன்னிப்பையும் கோரி இருந்தார்.
ஜெ .ஆர். ஜெயவர்தன அப்பொழுது ஜக்கிய தேசிய கட்சியின் ஆட்சியாளானாக தன்னுடைய அமைச்சர்களை வைத்து இத்தகைய பாதக செயல்களை செய்த அதே வேளையிலே, வன்முறையைத் தூண்டி விடுகின்ற செயற்பாட்டாளர்கள் இதனை மேற்கொண்டார்கள் என அறிவித்தார்கள்.
இந்த வேளையிலே மக்கள் விடுதலை முன்னணி ஜனநாயக நீரோட்டத்திலே கலந்திருந்தது. குறிப்பாக அன்றைய காலத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரோகண விஜய வீர போட்டியிட்டார்.
ரோகண விஜய் வீர போட்டி இடுகின்ற போது “தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு” என்று அறிவித்து போட்டியிட்டார்.
அதே போல வாசுதேவ நாணயக்கார அவர்களும் தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு என போட்டியிட்டவர்.
இந்த இடது சாரி கட்சிகள் வன்முறையை தூண்டி உள்ளது என பொய்யாக குற்றம் சாட்டி பலரை ஜெ.ஆர் ஜெயவர்த்தன கைது செய்தார்.
இதில் வாசுதேவ நாணயக்கார கைது செய்யப்பட்டர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவின் கணவர் வியாகுமாரதுங்க கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு பல இடது சாரி கடைசியில் தலைவர்கள் கைது செய்யப்படடார்கள். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி கடைசியில் தலைவர்கள் உடனடியாக தலைமறைவாக்கினார்கள்.
இதிலிருந்து இவர்கள் மீண்டும் ஒரு கிளர்ச்சிக்கு தயாராகி 5 வருடங்களின் பின்பு 1988,1999 ஆம் ஆண்டுகளிலே மீண்டும் ஒரு ஆயுத கிளர்ச்சியை நடாத்தினார்கள்.
ஆகவே ஜனநாயக நீரோட்டத்திலே இணைந்து செயற்படட முன்னாள் கிளர்ச்சியாளர்களை மீண்டும் நாட்டு வெளிகளில் இருந்து மக்கள் பார்வையில் இருந்து அவர்களை துரத்தியடித்தது.
மீண்டும் வன்முறை போராட்டம் உருவாக்க காரணமாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி ஜேர். ஆர். ஜயவர்தன ஆவார்.
39 வருடங்களுக்கு பிறகு இலங்கையின் மீண்டும் ஒரு கறுப்பு நாளாக நேற்றைய தினம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதற்கு காரணம் ஜெ.ஆர். ஜெயவர்த்தனாவின் உறவினர் ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று நிர்வாக ஜனாதிபதியாக பதவியேற்று தற்போது காலி முகத்திடலிலே 100 நாட்களுக்கு மேலாக அமைதியான வழியிலே போராட்டத்தை மேற்கொண்டிருந்தவர்களின் மீது மோசமான வன்முறை தாக்குதல் ஒன்றினை படையினர் மேற்கொண்டு இருக்கிறார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி கொள்ளுப்பிட்டி வரைக்கும் சிலரை இழுத்து சென்று புகையிரத கதவை மீதுள்ள கற்கள் மீது முழங்காலில் நடக்கும் படியாக சித்திரவதை செய்யப்பட்ட காட்சிகள் தற்பொழுது வெளிவந்துள்ளது.
மேலும் பண்டாரநாயக்கவின் சிலையை சுற்றி 50 மீராவுக்குள்ளே போக கூடாது என்று நீதிமன்ற கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த விடயத்தில் எடுக்கப்பட்ட முடிவு எல்லார் தலையிலும் பூ சூட்டுகின்ற விடயம். இதில் இன்னொரு விசித்திரமான விடயமும் உள்ளது.
மே 9 ஆம் திகதி இந்த ஆர்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. அந்த தாக்குதல் நடத்தப்பட்ட அதே வேளையிலே ஜக்கிய தேசிய கட்சியில் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலே இருந்து இரண்டு செய்திகள் வந்திருந்தன.
- முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறார் என்றும் இது உரிமை மீறல் என்றும், இதற்கெதிராக எல்லாரும் கிளர்ந்தெழ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
2.அரசாங்கம் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்துமாக இருந்தால் நான் அரசாங்கத்திற்கு கொடுக்கின்ற அத்தனை ஆதரவையும் இனிமேல் செய்யமாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே நேற்றைய தினம் மேற்கொண்ட தாக்குதலை நாங்கள் கண்டிப்பதை அவர் ஏற்றுக் கொள்ளுவார் என நாங்கள்ள நம்புகின்றோம் .
மே 9 தாக்குதலை கண்டித்த ரணில் விக்கிரமசிங்க ஏன் நேற்றைய தின போராட்டத்தை கண்டிக்கவில்லை என்பது தெரியவில்லை.
போராட்டகாலத்தில் இலங்கை அரசாங்கம் பெற்று கொண்ட கடன்களினால் இலங்கை அரசாங்கம் இன்று பின்னடைவை சந்தித்துள்ளது. உதவி செய்ய முன்வந்த நாடுகளும் தற்போது பின்னோக்கி செல்லுகின்ற நிலை காணப்படுகின்றது.
ஆகையால் அதிகார விளையாட்டுக்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் மிகவும் பாதகமான பின் விளைவை ஏற்படுத்தி இருக்கிறது.
யூலை மாதத்தில் இடம்பெற்ற கலவரம் நமக்கு வேதனை அளிக்கிறது. அத்துடன் 1956 ஆண்டு யூலை 5 ஆம் திகதி காலிமுகத்திடலில் எனது தலைவர்கள் தாக்கப்படடார்கள்.
ஆகவே சரித்திரம் திரும்ப திரும்ப வருவது போல் 66 வருடங்களுக்கு பின்பு அதே இடம் ஒரு போராட்ட களமாக மாறி இருக்கிறது .அதிலும் இது சற்று வித்தியாசமான போராட்டம்.
ஆனால் எல்லாவற்றிற்கும் தொடர்பு உள்ளது. 1956 இல் செயற்பட்டதான் விளைவு படிப்படியாக அதிகரித்து தனி நாட்டு கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.
இன்று அதே இடத்தில் இடம்பெற்ற போராட்டம் வன்முறையால் முறியடிக்கப்படுகின்ற போது, சர்வதேசத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டு இருக்கின்றதை அவதானிக்கலாம் .
மேலும் பொருளாதார படு குழிக்குள்ளே விழுந்திருகின்ற நாட்டை மீட்டேடுப்பதற்கான அறிய வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.
ஆகையால் கறுப்பு யூலை நாளை இன்று நாங்கள் நினைவு கூறுகின்றோம். அதிலே கொல்லப்பட்ட எங்களுடைய மக்களை நினைவு கூறுகின்றோம்.
இன்று தங்களது சொந்த மக்களிலேயே ஆட்சியாளர்கள் கை வைத்துள்ளார்கள். இதுவே இந்த பாசிச வாத இலங்கை அரசின் முடிவின் ஆரம்பம்- என்று கூறியுள்ளார்.