காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்கள்

இலங்கை சிறையிலுள்ள ஆறு மீனவர்களையும் படகையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தெரியவருகையில்,

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 21 ஆம் திகதி மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இந்த நிலையில் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகையும் அதிலிருந்த ஆறு மீனவர்களையும் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தது.

இதையடுத்து நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள ஜான் மடிக்கட்டுமிடத்தில் மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

இதை அடுத்து இன்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுடைய படகுகளை மீனவர்கள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்

இதனால் ஒரு நாளைக்கு ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகின்றது.

இதற்கு மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து இலங்கை சிறையில் உள்ள ஆறு மீனவர்களையும் படகையும் விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *