இலங்கை போக்குவரத்து சபையில் ஊழியர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் வடமாகாண ஜனநாயக போக்குவரத்து சங்க தலைவர், புவி தெரிவிக்கையில் ,
நேற்றைய தினம் எமது சாரதியாக கடமை ஆற்றிய கண்ணன் மற்றும் காப்பாளர் ஜான்சன் ஆகியோர் யாழ்ப்பானத்தில் இருந்து 57 வழியாக கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது கால்கமவில் வைத்து, கால்கமவை டிப்போ ஊழியர்கள் வழிமறித்து சாரதியையும் காப்பாளர்களையும் தாக்கியுள்ளார்கள். இதனால் சாரதியும் காப்பாளரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றமாய் குறிப்பிடத்தக்கது.
தற்போது வைத்தியசாலையில் சிகிசிக்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இதனை நாங்கள் ஒரு திட்டமிட்ட சதியாகவே பார்க்கின்றோம்.
அதே நேரம் இந்நிலைமை தொடர்ந்து ஏற்படுமாக இருந்தால் போக்குவரத்து ஊழியர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாக நேரிடும்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சாரதி மற்றும் காப்பாளர் குடும்பம் கண்ணீருடன் வைத்தியசாலையில் காத்திருக்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
ஆகவே உடனடியாக தாக்குதலோடு தொடர்புடைய அனைத்து ஊழியர்களும் கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை சட்டதிட்டங்களுக்கு அமைவாக உடனடியாக அவர்களை இடைநிறுத்தி தீர்வு வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு கைது செய்யப்படா விட்டால் அவர்களுக்கு எதிராக நாளைய தினம் தொடர்ச்சியான பாஸ்கரிப்பு போராட்டங்களில் ஈடுபடுவதோடு, பெரமுன தொழிற்சங்கம், யு .என் . பி தொழிற்சங்கம், ஜக்கிய மக்கள் தொழிற்சங்கம், வடமாகாண ஊழியர்கள் அனைவரும் இணைந்து தொழிலார்களின் நலன் கருதி பாஸ்கரிப்பில் ஈடுபட உள்ளோம் என்பதை அனைத்து மக்களுக்கும் தொழிலார்களுக்கும் அறியத் தருகின்றோம் என்று தெரிவித்துள்ளார்கள்.
பிறசெய்திகள்