
இன அழிப்புக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு என்ற புது அமைப்பு யாழில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அமைப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். எ சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்:
இந்த அமைப்பு தமிழர்களின் இன அழிப்பு மட்டும் அல்லாமல், உலகில் எங்கு இன அழிப்பு நடந்தாலும் அதற்காக குரல் கொடுக்கும் வகையில் இது செயற்படவுள்ளது.
தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இன அழிப்பை சர்வேதேசம் வரையில் ஆணிதரமாக கொண்டு செல்லும் வகையில் அமைப்பு செயற்படும்.
அத்துடன் அரசியல் தீர்வு தொடர்பிலும் இந்த அமைப்பு கவனம் செலுத்தும். இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புக்கு சாட்சியங்கள் உள்ளன. அவற்றை நாம் பல முறை சர்வேதேசம் கொண்டு சென்றுள்ளோம்.
எம்மிடம் ஆதாரம் இருந்தாலும், அதை சர்வதேச ரீதியில் சட்ட ரீதியாக கொண்டு செல்வதற்கு சில தடங்கள் காணப்படுகிறது.ஆகவே கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்று நாம் அதை சொல்ல வேண்டும்.
இது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் கூட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஆகவே சர்வேதேசத்தின் மனதை வென்று இந்த ஆதாரங்களை நிரூபிக்க வேண்டும் என்றார்.
யாழில் இடம்பெற்ற குறித்த அங்குரார்ப்பண நிகழ்வில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சி. சிறீதரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்,யாழ் மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன், மற்றும் வலி வடக்கு மீள் குடியேற்ற அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
பிறசெய்திகள்