மக்களின் பேச்சுரிமை மற்றும் ஒன்று கூடும் சுதந்திரத்தை ஏற்றுக் கொள்வதாக காவல்துறை தெரிவிப்பு!

சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பேச்சுரிமை மற்றும் ஒன்று கூடும் சுதந்திரத்தை ஏற்றுக் கொள்வதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிவிப்பதற்காக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, பொது மக்கள் சார்பாக தீர்மானங்களை மேற்கொள்ளும் பிரதான அலுவலமாக ஜனாதிபதி செயலகம் காணப்படுவதாகவும், ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் குறித்த செயற்பாடுகளுக்காக அந்த இடத்தை விடுவிப்பது காவல்துறையினரின் பொறுப்பாகும் எனவும் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *