நாட்டில் அவசர காலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக சுற்றுலாத்துறை வீ்ழ்ச்சியடையும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை நிபுணர்கள் இது தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்னர்.
தற்போதைக்கு ஜுலை மாதத்திற்குள் மட்டும் வெறும் 28 ஆயிரம் பேர் மட்டுமே சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டுக்குள் மொத்தமாக நான்கு லட்சம் பேர் வரையான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து போயுள்ளனர்.
இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்தே கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து போயுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் தற்போதைக்கு நடைமுறையில் உள்ள அவசர காலச் சட்டத்தின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக் கெடுபிடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான பயண எச்சரிக்கையும் உலக நாடுகள் தமது மக்களுக்கு வழங்கிய வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்