சிங்கள மக்கள் மீதான தமிழர்களின் கோபத்தில் நியாயம் உள்ளது! சிங்கள இளைஞன் ஆதங்கம்

தென்னிலங்கையில் இடம்பெறும் அரசியல் விளையாட்டுக்கள் சிங்களவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், தமிழர்கள் தொடர்பான சாதக நிலைப்பாடுகளும் தென்படத் தொடங்கியுள்ளன.

காலிமுகத்திடலில் கடற்படையின் வெறியாட்டம் சிங்களவர்கள் என்றும் எதிர்பார்க்காத ஒன்றாகும். அங்கிருந்தவர்கள் மீது கடற்படையினர் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டதுடன், பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறான தாக்குதலின் அடிப்படையில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான டிலான் சேனநாயக்க வெளியிட்ட தகவல் சிங்கள மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

ஆர்ப்பாட்டக்களத்திலிருந்து சமூக வலைத்தளம் ஊடாக கருத்து வெளியிடுகையில்,

“எம்மை இவ்வளவு மோசமாக தாக்குகின்றார்கள் என்றால் தமிழர்களை எவ்வாறு இராணுவத்தினர் தாக்கியிருப்பார்கள்.

போரில் மக்கள் செத்து மடியும் போது நாங்கள் போர் வெற்றி கொண்டாடினோம். அப்படி என்றால் நாம் எப்படி முட்டாளாக்கப்பட்டு தமிழர்களை புலிகள் என்று ஒதுக்கியிருப்போம். தொலைகாட்சியில் காட்டப்பட்ட விடயங்களை வைத்து பிரபாகரன் மீது எங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தினார்கள்.

நாங்களும் அவர்களை புலிகள், தீவிரவாதிகள் என ஒதுக்கி வைத்தோம். அப்படி என்றால் சிங்கள மக்கள் மீதான தமிழர்களின் கோபத்தில் நியாயம் உள்ளது. இராணுவத்தின் செயற்பாடு அவ்வாறான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிலான் வெளியிட்ட காணொளிக்கு பெருந்தொகையான சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தமது பின்னூட்டங்களை வெளியிட்டுள்ளனர்.

காலி முகத்திடலில் இராணுவத்தின் வெளியாட்டத்திற்கு ஐ.நா சபை உட்பட பல மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *