நாட்டு மக்களுக்கு ராம்நாத் கோவிந்த் விசேட உரை!

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் 14 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்ற ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் இன்றோடு நிறைவுக்கு வருகின்றது.

இந்நிலையில் இன்று இரவு, நாட்டு மக்களுக்கு ராம்நாத் கோவிந்த் விசேட உரையாற்றவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே இந்தியாவின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்றது.

இதில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்மு வெற்றிபெற்ற நிலையில், நாட்டின் 15 வது ஜனாதிபதியாக அவர் நாளை பதவியேற்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *