
அலரி மாளிகைக்கு செல்லக்கூடிய நிலைமை இன்னும் ஏற்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஓரிரு சம்பவங்கள் மூலம் ஒரு நாட்டை பற்றி தெளிவான தோற்றப்பட்டை ஏற்படுத்திக்கொள்ள முடியாது.
அரசாங்கம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமையவே செயற்படும். சர்வதேசம் பற்றி பேசுவதற்கு முன்னர் உள்நாட்டை பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
அரசாங்கம் வெளிநாடுகளில் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலையான அரசாங்கம் இல்லாமல் ஒரு நாடு முன்நோக்கி செல்ல முடியாது எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்