சைக்கிளில் வந்த சிறுமியை மோதித்தள்ளிய கார் : பின்னர் நடந்த அசம்பாவிதம்!

வீட்டிள் முற்றத்தில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த சிறுமியை கார் மோதியதில் உயிரிழந்த சம்பவம பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பமவானது இன்றையதினம் மொரகஹஹேன, மில்லவ பொல்வத் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி அப்பகுதியையுடைய தினிதி சத்சராணி ஜான்ஸ் சிறுமி என தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி வீட்டின் முன் சைக்கிள் ஓட்டி வந்த வேளையில் கட்டுபாட்டை இழந்த கார் ஒன்று வேகமாக வந்து சிறுமியை மோதியதில் சிறு தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து கார் வீட்டின் முற்றத்தில் மோதி பலத்த சேதத்தை உண்டு படுத்தியுள்ளது.

சிறுமியை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் இந்நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்தான மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *