ஜனாதிபதி மாளிகையில் திருடியவர்கள் சிக்கினர்!

கடந்த ஜூலை 09ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி செயலகத்தை ஆக்கிரமித்ததன் பின்னர், அத்துமீறி பிரவேசித்த குற்றத்திற்காக அங்கு சென்ற அனைவரையும் அடையாளம் காண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகளில் பதிவான ஆதாரங்களின் அடிப்படையில் பெறுமதியான வரலாற்றுப் பொருட்களை திருடிய பிரதான சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரையும் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் நடவடிக்கையை வெடிகுண்டு செயலிழப்பு பிரிவும் ஆரம்பித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *