டலஸ் தலைமையில் புதிய கூட்டணியை ஸ்தாபிக்க ஆலோசனை!

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் அவதானம் செலுத்திப்பட்டுள்ளது.

கூட்டணியாக சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றிணைவது குறித்தும் ஆலோசனைகளை முன்னெடுத்து வருவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

நிகழ்கால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சளவில் மாத்திரமே ஜனநாயகவாதி, அதிகாரத்தில் இல்லாதபோது ஜனநாயகம் பற்றி பெருமிதமாக கருத்துரைப்பவர், அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் ஜனநாயகத்துக்கு எதிராகவே அவர் செயற்படுவார் என்பதற்கு காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல் சான்றாக உள்ளது.

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைந்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமே தோற்றம் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *