கடும் வெப்பத்தால் உருகும் லண்டன்

இங்­கி­லாந்­தில் இது­வரை இல்­லாத அள­வில் கடு­மை­யான வெப்­பம் மற்­றும் அனல்­காற்று நிலவி வரு­வ­தால் சாலை­க­ளில் உள்ள தார்­கள் மற்­றும் போக்­கு­வ­ரத்து சமிக்­ஞை­கள் என்­பன வெப்­பத்­தால் உருகி போக்­கு­வ­ரத்துக்கு கடும் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.

இங்­கி­லாந்­தில் வர­லாறு காணாத வகை­யில், கடந்த சில நாள்­க­ளாக வெப்­ப­நிலை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கி­றது. அங்கு 40 டிகிரி செல்­சி­யஸைத் தாண்டி வெப்­பம் பதி­வாகியுள்­ளது.

இந்­த­நி­லை­யில் அண்­மை­யில் லண்­ட­னின் விக்­டோ­ரியா நக­ரில் உள்ள ஒரு மரக்­கட்­டை­யா­லான ரயில்வே தண்­ட­வா­ளம் தானாகத் தீப்­பி­டித்து எரிந்­துள்­ளது.

அத்­து­டன் உஷ்­ணத்­தால் சில இடங்­க­ளில் இரும்புத் தண்­ட­வா­ளங்­க­ளும் வளை­கின்ற அபாய நிலை ஏற்­பட்­டுள்­ள­து­டன் தார் வீதி­கள் மற்­றும் ரயில்வே சிக்­னல்­க­ளும் உருகி ஓடு­கின்­றன. இதன்­கா­ர­ண­மாகப் பல இடங்­க­ளில் ரயில் சேவை­யும் முடங்­கி­யுள்­ளது.

வெப்­பத்­தால் மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ள­து­டன் பாட­சா­லை­கள் மற்­றும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் அந்­த­நாட்டு அர­சாங்­கத்­தால் விடு­முறை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *