இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவில் கடுமையான வெப்பம் மற்றும் அனல்காற்று நிலவி வருவதால் சாலைகளில் உள்ள தார்கள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகள் என்பன வெப்பத்தால் உருகி போக்குவரத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வரலாறு காணாத வகையில், கடந்த சில நாள்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் அண்மையில் லண்டனின் விக்டோரியா நகரில் உள்ள ஒரு மரக்கட்டையாலான ரயில்வே தண்டவாளம் தானாகத் தீப்பிடித்து எரிந்துள்ளது.
அத்துடன் உஷ்ணத்தால் சில இடங்களில் இரும்புத் தண்டவாளங்களும் வளைகின்ற அபாய நிலை ஏற்பட்டுள்ளதுடன் தார் வீதிகள் மற்றும் ரயில்வே சிக்னல்களும் உருகி ஓடுகின்றன. இதன்காரணமாகப் பல இடங்களில் ரயில் சேவையும் முடங்கியுள்ளது.
வெப்பத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் அந்தநாட்டு அரசாங்கத்தால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.