கட்சியில் அனைவருக்கும் ஒரே நியதிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சு பதவியினையும் பெற்றுக்கொள்ள போவதில்லை என மத்திய செயற்குழுவினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டள்ளது.
இந்நிலையில் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மகிந்த அமவீர ஆகியோர் இரு அமைச்சரவை அமைச்சுக்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
குறித்த இருவருக்கும் எதிராக மத்திய செயற்குழு மேற்கொண்ட தீரமானங்களுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதியும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கட்சியின் பொது செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்வின் போது பதில் ஜனாதிபதியாக கடமையாற்றிய ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்திருந்தார்.
அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் ஒரே நியதியை நடைமுறைப்படுத்த கட்சியின் தலைவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிறசெய்திகள்