ஆளுங்கட்சியில் சிறந்த ஆட்சியாளர்கள் இல்லை என்பதைவிட எதிர்க்கட்சியில் ஆளுமை மிக்க தேசப்பற்றுமிக்க தலைவர் இல்லை என்றே கூற முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணியைச் சேர்ந்த கந்தையா அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கும் அரசியல் நெருக்கடிக்கும் ஆளும்கட்சி எவ்வாறு பொறுப்பாகின்றதோ அவ்வாறே எதிர்க்கட்சிக்கும் உள்ளது.
எதிர்கட்சி முன்னெடுக்க வேண்டிய போராட்டத்தை மக்கள் முன்னெடுத்தார்கள் வெற்றியும் கண்டார்கள். இதே எதிர்கட்சி நாளை ஆளும் கட்சியாகவும் வரக்கூடும்!அரச தலைவர் மாற்றத்தில் பிரதான எதிர்க் கட்சியின் பங்கு என்ன?நமது நாட்டில் தேர்தல் அரசியலுக்காக மட்டும் தமது நேரத்தை செலவிடும் தலைவர்கள் இருக்கும் வரை இவ்வாறான நெருக்கடிகள் தவிர்க்க முடியாதவை.
ஆக ஒரு எதிர்கட்சி செய்ய வேண்டிய வேலையை மக்கள் செய்தார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்