
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முக்கிய ஆவணங்களை குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர் நாடளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனிடம் இன்று கையளித்துள்ளனர்.
குறித்த சந்திப்பு தொடர்பில் அமைப்பின் தலைவர் மு.கோமகன் கருத்து தெரிவிக்கையில்:
கடந்த 26 வருடங்களாக சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களை, நாடளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் இன்று கையளித்துள்ளோம். 46 தமிழ் அரசியல் கைதிகள் சுமார் 10 வருடங்கள் தொடக்கம் 26 வருடங்கள் வரை சிறையில் உள்ளனர்.
அவர்களின் விடுதலை வலியுறுத்தி விக்னேஸ்வரன் ஐயாவை சந்தித்து இருந்தோம். தமிழ் மக்களுக்காக போராடி தான் அவர்கள் கைதிகளாக சிறையில் உள்ளனர். இவர்கள் ஏதோ ஒரு பொறிமுறை ஊடாக என்றாலும் விடுவிக்கப்பட வேண்டும்.
கடந்த நல்லாட்சிக் காலத்தில் நாம் ஏமாற்றப்பட்டோம். அன்றைய பிரதமர் இன்று ஜனாதிபதியாக உள்ளார். ஆகவே அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான ஆவணங்களை விக்னேஸ்வரன் ஐயாவிடம் ஒப்படைத்துள்ளோம் என்றார்.
பிறசெய்திகள்