களனி தலுகம பகுதியில் போக்குவரத்து நெரிசல்!

கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியின் களனி, தலுகம பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக எரிபொருள் வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி கலவரத்தில் ஈடுபட்டனர்.

எனினும் பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக உள்ளூர் ஹிரு செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இப்பாகமுவ மற்றும் மல்சிறிபுர பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *