நாட்டின் மின்விளக்கு ‘ஸ்விட்சை’ வெளிநாடுகளிடம் ஒப்படைத்தால் நாடு இருளில் மூழ்கும் -சஜித் எச்சரிக்கை!

நாட்டின் மின்விளக்கு ‘ஸ்விட்சை’ வெளிநாடுகளிடம் ஒப்படைத்தால் நாடு இருளில் மூழ்கும் நிலையே ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குழுவை இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் எரிசக்தி முறைமையை மேம்படுத்தும் வகையிலான புதிய கொள்கையை உருவாக்குவதே சிறந்தது. ஆனால் பெரும்பாலானோர் விற்பனை செய்து அல்லது தனியார்மயமாக்குவதையே செய்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார சபை ஒரு தேசிய வளம் என்பதோடு அதைப் பாதுகாத்து முன்னேற்றுவதற்கு உடனடியாக திட்ட வரைவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *