புத்தளத்தில் நாளை முதல் QR மூலம் எரிபொருள் விநியோகம்!(படங்கள் இணைப்பு)

புத்தளம், அபுதாகிர் பெற்றோல் நிலையம் மற்றும் புத்தளம் பல்நோக்குக் கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையங்களுக்கு இன்று இரவு பெற்றோல் வரவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. 

இதனடிப்படையில் நாளை காலை அதிகாலை 5 மணி முதல் 6,7,8,9 ஆகிய கடைசி இலக்கத் தகடு அடிப்படையில்  மோட்டார் சைக்கிள்களுக்கு 1500 ரூபாவிற்கும் முச்சக்கர வண்டிகளுக்கு 2000 ரூபாவிற்கும் ஏனைய வாகனங்களுக்கு 7000 ரூபாவிற்கும் பெற்றோல் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

இதன்போது QR கோட் மூலம் பெற்றோல் வழங்கப்பட உள்ளதால் Fuel Pass அவசியம் என எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் அறிவித்துள்ளமைக குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *