ஜனாதிபதி தேர்தலில் தனக்கு எதிராக இந்தியா செயல்பட்டதா என்று தொலைபேசி வாயிலாக ரணில் விக்கிரமசிங்க கேட்டறிந்தார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
ரணில் மீது இந்தியா கோபத்தில் இருக்கிறது என்றும், ரணிலால் இந்தியாவுக்கு சிக்கல் நிலைமை ஏற்பட்டதாகவும் தகவல்கள் பரவின. இந்த விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கடுமையாகப் பாதித்தது.
ஏனெனில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக சிகடினமான முடிவுகளை எடுக்கும்போது, அந்த முடிவுகளின் பின்னணியில் இந்தியா இருப்பதுதான் பிரதான காரணம்.
அதன்படி இது தனக்கு பாதகமானது என்பதை ரணில் உடனடியாக உணர்ந்து, அதைச் சரிபார்க்க, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருடன் தொலைபேசியில் பேசினார் என்று அறிய வருகின்றது.
தமிழக அரசியல் கட்சிகளின் வேண்டு கோளுக்கு இணங்க, இலங்கை நிலைமை குறித்து ஆலோசிக்க இந்தியா ஏற்கனவே அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டியிருந்த நிலையில், ரணில் முதலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடி, இந்த விவகாரம் குறித்து நேரில் பேச விரும்பினார்.
இதையடுத்து, இந்திய வெளியுறவு துறை அமைச்சரின் பணிப்பின் பேரில், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே ரணிலை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
அத்துடன், இலங்கையின் அரசியல் விவகாரங்களில் இந்திய அரசு தலையிடாது என்றும் அவர் இதன்போது கூறினார்.
பிறசெய்திகள்