<!–
நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) 7 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக பெற்றோலிய சேமிப்பு முனையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய அனைத்து சிபெட்கோ நிரப்பு நிலையங்களுக்கும் 4 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் மற்றும் மூவாயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோல் விநியோகிக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்று இரவும் பெட்ரோல் நிலையங்களுக்கு அருகே நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கத்திற்கு அமைய எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து எரிபொருள் விநியோகிக்கப்படும் என அகில இலங்கை பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.