குரங்கு காச்சல் பரவும் முறைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொவிட் தொற்றுடன் ஒப்பிடும் போது குரங்கு காய்ச்சலானது குறைவான வேகத்தில் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நோயை சர்வதேச பொது சுகாதார அவசரநிலை என்று மட்டுமே உலக சுகாதார அமைப்பு அறிவித்ததுடன், தொற்றுநோய் அளவிலான அச்சுறுத்தல் அல்ல என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உயிரணு உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், PCR பரிசோதனையின் மூலமும் குரங்கு காய்ச்சலைக் கண்டறிய முடியும்.

சுவாச அமைப்பு, சளி அல்லது தோலுடன் தொடர்பு கொள்வதன் மூலம் வைரஸ் பரவும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இது விலங்குகள் மூலமாகவோ அல்லது மனிதர்கள் மூலமாகவோ பரவக்கூடும் என்றும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்கள் ஒரே தட்டு, கோப்பை அல்லது பிற தனிப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படக்கூடும் என்று எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *