
எரிபொருளை மறைத்து வைத்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் முகாமையாளரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5,813 லீற்றர் சுப்பர் டீசல் மற்றும் 1,540 லீற்றர் பெட்ரோலை நுகர்வோருக்கு வழங்காமல் மறைத்து வைத்த குற்றத்திற்காக குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்படி, அவருக்கு மூன்று மாத இடைநிறுத்தப்பட்ட மூன்று வருட சிறைத்தண்டனையை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என அநுராதபுரம் நீதவான், குற்றவாளிக்கு அறிவித்துள்ளார்.
நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அண்மையில் இந்த சோதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.