ரணிலுக்காக டலஸிடம் பேரம் பேசினார் நாமல்?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவிடம் நாமல் ராஜபக்ஷ பேரம் பேசினார் என்று தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் பெரும் பிரச்சினை எழுந்தபோது நாமல் ராஜபக்ஷ இதில் தலையிட்டு டலஸ் அழகப்பெருமவிடம் திட்டம் ஒன்றை கூறினார்.

இதன்போது, ரணில் நிச்சயம் அரச ஜனாதிபதியாக வருவார் என்றும், அதன் பின்னர் 19 ஆவது திருத்தச் சட்டம் போன்ற அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும், அதன் பின்னர் பிரதமர் பதவி டலஸூக்கு வழங்கப்படும எனவும் பேரம் பேசப்பட்டது.

அத்துடன், பிரதமர் பதவிக்குரிய அதிகாரங்கள் பிரதமருக்கே வழங்கப்படும் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

ஆனால், நாமல் ராஜபக்ஷ முன்வைத்த இந்தத் திட்டத்தில் டலஸ் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை. இதன்பின்னரே, பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடம் ரணிலுக்கு வாக்களிக்குமாறு கோரி நாமல் தொலை பேசியில் அழைப்பு விடுக்க தொடங்கினார்.

ஆனால், நாமலின் தொலைபேசி அழைப்புக்களுக்கு பல மூத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தொடர்ந்து மூத்த உறுப்பினர்களுக்கு நாமலால் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள முடியவில்லை.

இதேபோன்று அழைப்புக்களை மேற்கொள்ள வேண்டாம் என்று பல பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் தொடர்பாக மூத்த உறுப்பினர்களிடம் முறை
யிட்டிருந்தனர் என்றும் கூறப்பட்டது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *