9 சீமெந்து மூடைகள் மாயம்- இருவர் சிக்கினார்!

ஹொரன பிலான்டேசனுக்கு உரித்தான சாமிமலை பெயர்லோன் தோட்டத்தில் நேற்று முன்தினம் (23) தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வடிகால்கள் திருத்தம் செய்ய கொண்டு வந்த சீமெந்து மூடை 9 களவு போனதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தோட்ட முகாமையாளரின் பணிப்புரை படி தோட்ட உதவி முகாமையாளர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் ஒன்றை செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அத்தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *