
நாட்டில் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள உணவுப்பற்றாக்குறைக்கு முகங்கொடுக்கும் வகையில் கைவிடப்பட்ட காணிகளில் பொது மக்கள் பயிர்ச்செய்கையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த, இம் முயற்சியின் இன்னொரு திட்டமாக களனிவெளி கைவிடப்பட்ட புகையிரத வீதியில் மிகுதியாக உள்ள நிலப்பரப்புகளில் அயல் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் சிறு சிறு காணித் துண்டுகளாகப் பிரித்து பல்வேறு மரக்கறி மற்றும் பழச்செசெய்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதாவது அவிசாவளை தொடக்கம் ஓப்பனாயக வரையிலான கைவிடப்பட்ட புகையிரத வீதியிலேயே இந்த பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வீதியில் காணப்படும் நிலப்பரப்பை மக்கள் சிறு வேலிகளாளால் வரையறுத்துக் கொண்டு இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பிற செய்திகள்