யாழ்.சாலை ஊழியர்கள் தாக்குதல் சம்பவம்! டக்ளஸ்க்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டனர்.

குறித்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும்வரை வரை தாம் பணிப்புறக்கணிப்பை தொடரவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில், பேரூந்துக் கடமையின் போது தாக்குதலுக்கு உள்ளாகும் ஊழியர்கள் சார்பாக வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்கம், கடல் தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,

மேற்படி விடயம் சம்பந்தமாக 22.07.2022ஆம் திகதி யாழ் பேரூந்து நிலையத்திலிருந்து 57 வழித்தடத்தின் ஊடாக இரவு 21.00 மணிக்குப் புறப்பட்ட Nc 0994 இலக்கமுடைய இ.போ.சபை பேரூந்து, நள்ளிரவு 01.30 மணியளவில் ‘தலதாகம’ எனுமிடத்தில் கல்கமுவ இ.போ.சபை ஊழியர்களினால் Nc 1154 எனும் இலக்க பேரூந்தில் வந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.

எவ்வித குற்றமிழைக்காத எமது சாரதி மற்றும் காப்பாளர் மீது அண்ணளவாக 15 பேருக்கு மேற்பட்டவர்களினால் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, எமது யாழ்சாலை சாரதி P. கண்ணன் மற்றும் காப்பாளர் ளு. யான்சன் ஆகியோர் கடும் உபாதைக்கு உட்பட்டு தொடர்ந்து சேவையாற்ற முடியாதநிலையில் உடனடியாக யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்து
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், அனைத்து ஊழியர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி மனஉளைச்சலுடன் மேலும் தாங்களும் பாதிக்கப்படலாம் எனக்கருதுகின்றனர்.

எனவே, எமக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கைதுசெய்யப்படும்வரை எமது பணிப்புறக்கணிப்புத் தொடரும்
என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம் என கூறப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *