
பிறந்து இரண்டு நாள்களேயான சிசு ஒன்று, கை விடப்பட்டிருந்த நிலையில், அக்கராயன், இரு நாள்களேயான…
முழங்காவில் வீதியில் , பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
பிரதான வீதிக்கருகேயுள்ள வீதியொன்றில் துணியொன்றில் சுற்றப்பட்டிருந்த நிலையில், சிசு கைவிடப்பட்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சிசுவை மீட்டுள்ளனர்.
சிசு தற்போது கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தச் சிசு ஆரோக்கியமான நிலையில் உள்ளது என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.