
மூன்றாவது கப்பலில் இந்திய அரசின் மூலம் தமிழ் நாட்டில் இருந்து இலங்கை மக்களுக்கு வழங்கிய நிவாரணம் பொருட்கள் இன்னும் கிடைக்கவில்லையென மஸ்கெலியா மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மஸ்கெலியா நகரை சுற்றி உள்ள 300 க்கு மேற்பட்ட வரிய குடும்பத்தை சார்ந்த வர்களுக்கு இன்னும் இந்திய தமிழக அரசின் மூலம் வழங்கபட்ட நன்கொடை பொருட்கள் கிடைக்கவில்லை.
இந்த மக்களுக்கு யார் முன் நின்று பொருட்களை பெற்று கொடுப்பார்கள் என கேள்வி குறியாக உள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி மஸ்கெலியா நகரில் உள்ள அனைத்து மக்களும் இந்த பொருட்களை பெற்று கொடுக்க முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மேலும் பல பகுதிகளில் இவ்வாறு பொருள் கிடைக்கவில்லை என ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.