வவுனியா இ.போ.ச சாலை ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு

இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

உதவி சாலை முகாமையாளர் (பொறியியல்) மாற்ற கோரியும் ஊழியர்களிற்கான பெற்றோலினை சீரான முறையில் வழங்க கோரியே குறித்த பணிபகிஸ்கரிப்பானது இடம்பெற்று வருகின்றது.

இதன் காரணமாக இ.போ.ச வவுனியா சாலைக்குரிய பேருந்துகள் அனைத்தும் இன்றையதினம் சேவையில் ஈடுபடவில்லை.

இன்றையதினம் கல்வி அமைச்சினால் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இ.போச வவுனியா சாலையினர் பணிபகிஸ்கரிப்பு மேற்கொண்டமையினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருந்தார்கள்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *