கிளிநொச்சியில் 82 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் 82 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, 82 போத்தல் கசிப்பு மற்றும் 238 லிட்டர் கோடாவும் மீட்கப்பட்டதுடன், கசிப்பு உற்ப்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவும், உள்ளுர இடியன் துப்பாக்கி ஒன்றைம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் தருமபுரம்  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *