இந்தியாவின் புதிய ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதம்!

இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்றுக் கொண்டுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து கடிதமொன்று சென்றுள்ளது.

இந்தியாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 64 சதவீத வாக்குகளை வெற்றியினை தன்வசமாக்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று காலை திரௌபதி முர்முவிற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கு வாழ்த்து தெரிவித்து, இலங்கை ஜனாதிபதி குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *