கசிப்பு மற்றும் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 82 போத்தல் கசிப்பு, 238 லிட்டர் கொடாவும், கசிப்பு உற்ப்பத்திக்குபயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத இடியன் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தருமபுரபோலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.