விவசாயத்துக்குத் தேவையான மண்ணெண்ணெய் மற்றும் டீசல் என்பவற்றை சீரான முறையில் விநியோகிக்குமாறும் விவசாயத்துக்குத் தேவையான உரத்தை வழங்குமாறும் சங்கானை பிரதேச செயலகம் முன்பாக விவசாயிகள் இன்று (25) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 12 விவசாய சம்மேளனங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கானை பிரதேச செயலகத்தின் வெளிப்புற வாயிலில் வெளிப்புற வாயிலில் இருந்து பிரதேச செயலாக வளாகம் வரை சென்ற போராட்டக்காரர்கள் பிரதேச செயலரிடம் தமது கோரிக்கை அடங்கி மனுவை கையளித்தனர்.
இதுதொடர்பில் சங்கானை பிரதேச செயலரைச் சந்தித்து தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தனர்.
அந்த மனுவில் உள்ளதாவது :
ஒன்றரை மாதங்களாக விவசாயிகள் எரிபொருளின்றி சிரமப்படுகின்றோம். இதுதொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் வலியுறுத்தி வருகின்றபோதும் எந்தவொரு வழிமுறையும் மேற்கொள்ளப்படவில்லை.
பெரும்போக செய்கை ஆரம்பமாகவுள்ள நிலையில் விவசாயிகள் எதிர்நோக்கும் நெருக்கடியை கருத்திற்கொண்டு விரைந்து எரிபொருள் மற்றும் உரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்றுள்ளது.