தனியார் மயமாக்கப்படும் தொடருந்து சேவை?

தொடரூந்து கட்டணத்தை 100% ஆல் அதிகரிப்பதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என இலங்கை தொடரூந்து நிலைய அதிபர்கள் சங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது.

சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.

குறிப்பிட்ட சில தொடரூந்துப் பிரிவுகள் 200 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனையே தாம் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதிக விகிதாச்சாரத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால் பயணிகள் தொடரூந்தில் செல்வதை நிறுத்திக்கொள்வார்கள்.

எரிபொருள் விலையேற்றம் மற்றும் இலங்கை தொடரூந்து சேவைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடு செய்வதற்காக 10 ரூபா அனுமதிச்சீட்டுக்களை 20 ரூபாவாக அதிகரிப்பது நியாயமானது என சோமரத்ன கூறினார்.

தொடரூந்து திணைக்களத்திற்கு வருமானம் ஈட்டுவதற்காக தமது சங்கம் பல முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.

இந்தநிலையில் தொடரூந்து சேவையை தனியார் மயமாக்க வேண்டிய அவசியம் இல்லை.

மாறாக, விடாமுயற்சியுடன் கூடிய நிர்வாகத்தின் மூலம், தொடரூந்துத் துறையை அரசாங்கத்தின் கீழ் பராமரிக்க முடியும் என்றும் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *