அடுத்த வேளை உணவிற்காக பாரிய இன்னல்களை அனுபவிக்கும் இலங்கை மக்கள்!

இலங்கையில் பத்து பேரில் மூன்று பேர் அடுத்த வேளை உணவிற்காக பாரிய இன்னல்களை அனுபவிக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சரோஜி சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சரோஜி சாவித்திரி போல்ராஜ் இதனை தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விபரங்கள் உள்ளடகப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தையையும் சுமந்துக்கொண்டு பால்மா, மற்றும் ஒளடதங்களுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் அராஜக போக்கினை கண்டித்து காலிமுகத்திடலில் மாத்திரமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் முன்னெடுத்த பேராட்டத்தினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உதாசீனப்படுத்தியுள்ளார்.

மேலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் இதுவரை முடிவுக்கு வரவில்லை, ஜனநாயக ரீதியான அரசாங்கம் ஒன்றினை ஸ்தாபிக்கும் வரை போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சரோஜி சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *