யாழில் தனியார் பேருந்து வேவைகளும் நாளை வழமைக்கு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் நாளை (26) முதல் 50 வீதமளவில் இயங்குமென யாழ் மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ. கெங்காதரன் தெரிவித்தார்.

யாழ் பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணைய அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாளை முதல் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் யாழ் மாவட்ட செயலக மேற்பார்வையில் எரிபொருளை பெற்றுத்தர அரச அதிபரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பேருந்துகளை நாளை முதல் இயக்க தீர்மானித்துள்ளோம். என்றார்.

எரிபொருள் பெறுவதிலுள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்ட தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூரில் இன்றைய தினம் சேவையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு பிராந்தியம் தழுவியதாக கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டு பணிப் பகிஸ்கரிப்பு இடம்பெற்றது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் மக்கள் பொதுப் போக்குவரத்தை நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இரண்டு நாட்களாக பேருந்து சேவைகள் இடம்பெறாமையால் மக்கள் கடும் இன்னல்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளநிலையில், போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *