
சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக மனித உரிமை அமைப்பு புகார் அளித்து கைது செய்ய வேண்டும் என கோரியுள்ளது.
குறிப்பாக இலங்கையில் இருந்து தப்பி சிங்கப்பூரில் வசிக்கும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு சிக்கல்கள் அதிகரிக்கலாம்.
இலங்கையின் முன்னாள் அதிபரை கைது செய்யுமாறு தென்னாபிரிக்க மனித உரிமைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மனித உரிமைகள் அமைப்பு சிங்கப்பூரில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இலங்கையில் பல தசாப்தங்களாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் ராஜபக்சேவின் பங்கு குறித்து, அந்த நேரத்தில் ராஜபக்சே நடத்திய அடக்கு முறை காரணமாக போர்க் குற்றவாளியாக கருத வேண்டும் எனவும், அவரை கைது செய்ய வேண்டும் என கோரியுள்ளது.
அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு முன்பும், உள்நாட்டுப் போரின் போது இலங்கை ராணுவம் மற்றும் ராஜபக்சேவின் பங்கு குறித்து பல சர்வதேச அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் சிங்கள பௌத்த பெரும்பான்மையினர் அண்மைக்காலம் வரை கோட்டாபய ராஜபக்ஷேவை ஒரு போர் வீரனாகவே கருதினர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதன் தலைவர் பிரபாகரனை ஒழிப்பதில் ராஜபக்சேவின் பங்கு மனித உரிமை மீறய செயல் என சிலரால் குற்றம் சாட்டப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதித் அமைப்பின் (ITJP) வழக்கறிஞர்கள் சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலிடம் குற்றவியல் புகாரை தாக்கல் செய்துள்ளனர்.
73 வயதான ராஜபக்சே போர்க்குற்றத்திற்காக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. அவரை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியுள்ளது.
பிற செய்திகள்